Header Ads



ரிசாட் பதியுத்தீன் எந்த மேடையில் ஏறுகின்றார், என்பது இந்நாட்டு மக்களின் பிரச்சினை அல்ல - அனுரகுமார


இன்று நாட்டின் அரசியல் பேசு பொருளாகவுள்ள விடயங்களில் மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி முன்னணியின் சுகாதாரக் கொள்கை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

மக்களின் உண்மையான பிரச்சினைகளை சரிசெய்யும் அரசியல் மேடைகள் உருவாக்கப்பட வேண்டும். இன்று நாட்டின் அரசியல் பேசு பொருளாகவுள்ள விடயங்களில் மக்களின் பிரச்சினைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

இன்று அரசியல் பேசு பொருளாகவுள்ள விடயங்கள் என்ன என்பதை மக்கள் அவதானம் செலுத்துதல் வேண்டும். ஆறுமுன் தொண்டமானின் ஆதரவு யாருக்கு, ரிசாட் பதியுத்தீன் எந்த மேடையில் ஏறுகின்றார் என்பதல்ல இந்த நாட்டு மக்களின் பிரச்சினை.

இதனாலேயே எமது முன்னணி எட்டு பிரதான துறைகள் தொடர்பில் தனித்தனி கொள்கைப் பிரகடனங்களை வெளியிடுவதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments

Powered by Blogger.