என்னை முழுமையாக நம்புங்கள் - நாட்டு மக்களிடம் கோத்தபய கோரிக்கை
தன்மை முழுமையாக நம்புமாறு நாட்டு மக்களிடம் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான மற்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை தான் உருவாக்குவதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நிலையான தன்மையை ஏற்படுத்துவதற்கும், அதன் ஊடாக பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கும் தான் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியதனை போன்றே, இம்முறை சமர்ப்பித்துள்ள அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தன் மீது நம்பிக்கை வைத்து மக்கள் தமது கடமைகளை நிறைவேற்றுமாறும், தான் மக்களின் கடமைகளை நிறைவேற்றுவதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
திக்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கோத்தபாய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒரு மண்குதிரை, என்னை முற்றாக நம்பி என்மீது ஏறிக்கொள்ளுங்கள் , உங்களை பாதுகாப்பாக அடுத்தகரைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன் என்பதையும் நம்புங்கள்.
ReplyDelete