Header Ads



தென் கொரியாவில் இலங்கையர் படுகொலை - சிலருக்கு காயம்

தென் கொரியாவுக்கு தொழிலுக்காக சென்றுள்ள இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். 

இலங்கையை சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்போது, மேலும் சில இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவர்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிய தகராறின் பிரதிபலனாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.