தாக்குதல் நடத்தவிருப்பதாக வெளியான தகவலினால், முஸ்லிம் பகுதியில் பொலிஸார் குவிப்பு
கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் இன்று -24- இரவு ஏற்பட்ட பதற்றத்தில் யுவதி ஒருவர் காயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிங்கள யுவதியின் கையை சந்தேக நபரான முஸ்லிம் இளைஞன் காயப்படுத்தியதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் மஹய்யாவ பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை மஹய்யாவ பகுதியில் சில இளைஞர்கள் தாக்குதல் நடத்தவிருப்பதாக வெளியான தகவலை அடுத்து முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment