Header Ads



அநுரகுமார சார்பில், கட்டுப்பணம் செலுத்தப்பட்டது


தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க சார்பில் இன்று -01-கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் 10.30 அளவில் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தினர்.

இன்றைய தினம் அநுர குமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாகவும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்களை சேர்ந்த மேலும் 4 வேட்பாளர்கள் நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதன்படி, 9 பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், 5 சுயேட்சை குழுக்களை சேர்ந்த வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.