Header Ads



சஹ்ரானுக்கு உயிர் கொடுத்து, வங்கியை கொள்ளையிட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும்

கோத்தபாய ராஜபக்ச என்பவர் போரை முகாமைத்துவம் செய்து 30 ஆண்டு போரை வெற்றி கொண்டவர் என்பதுடன் கொழும்பின் கலாசாரத்தை மாற்றி நகரை அழகுப்படுத்திய தலைவர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெற செய்ய நாங்கள் வீடு, வீடாக செல்வோம். மீண்டும் அன்னப் பறவை சின்னத்தில் வந்து, ஐக்கிய தேசியக் கட்சி மக்களை ஏமாற்ற இடமளிக்க போவதில்லை.

சஹ்ரானுக்கு உயிர் கொடுத்து, வங்கியை கொள்ளையிட்ட அரசாங்கம் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும். தேவாலயங்களுக்கும் விகாரைகளுக்கும் செல்ல முடியாதபடி வேலைகளை செய்யும் அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டியதில்லை.

மக்களை அச்சமூட்டும் பயங்கரத்திற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம். தவறியேனும் சஜித் வெற்றி பெற்றால் ரணிலே நாட்டின் பிரதமர். அப்போது அமைதி சீர்குலைந்து, நாட்டின் பாதுகாப்பு இல்லாமல் போகும் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Your boss only created Zahran .
    Your got benifit feom this govt.

    ReplyDelete
  2. I HAVE SEEN THIS MAN WEERAWANSA STAYING A TIMBER STORES WARE HOUSE IN AMOUR STREET-BLOMONDEL ROAD JANCTION SOME TIME IN 1972/1973 HE USED TO SHARE ROSE BREAD AND PLAIN TEA WITH A FRIEND OF MINE WHO WAS WORKING AT CINEMAS LTD-KG INDUSTRIES.MY FRIEND IS A POOR MAN BUT WEERAYA IS A MULTI MILLIONER NOW-WHAT WONDER POLITICS CAN DO FOR SINGALEASE IN SRI-LANAKA.

    ReplyDelete
  3. This man is I'm fact a paraya and his tribe is still doing mattalam at perahera.check Mervin Silva YouTube story of this modyas pedigree.

    ReplyDelete

Powered by Blogger.