Header Ads



"ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவது பிரயோசனமற்றது"

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவது பிரயோசனமற்றது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

கம்பளை பகுதியில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க எவ்வாறான உத்திகளை கையாண்டாலும் அதில் பயனில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதற்கமைவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 70 வீதமான வாக்குகளை பெற்று நிச்சயம் வெற்றிப் பெறுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.