Header Ads



கொலைக் குற்றச்சாட்டில், ஸ்ரீரங்காவுக்கு பிணை

வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் -18- வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா சார்பாக சிரேஷ்ட சட்டதரணி சிற்றம்பலம், தயாபரன் உள்ளிட்ட பத்து பேர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

1 comment:

Powered by Blogger.