Header Ads



"முஸ்லிம் சமூகம் சிந்தித்து சஜித்தை வெற்றிபெறச் செய்யவேண்டும்"

கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தோமோ அது போல் கோத்தபாயவையும் இம்முறை நிராகரிப்போம் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் இன்று -29- இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இனவாதத்தை கக்கும் அதுரலிய ரதனதேரர், எஸ்.பி.திஸாநாயக்க, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில போன்றோர்கள் மொட்டுக்கு ஆதரவளிக்கிறார்கள்.

இதை உணர்ந்து கொண்டாவது முஸ்லிம் சமூகம் சிந்தித்து சஜித்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் எவ்வாறு மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோமோ அது போன்று கோத்தபாயவையும் வீட்டுக்கு அனுப்புவோம்.

ஒன்றாய் ஓரணியில் நின்று சிறந்த தலைமைத்துவத்தை தெரிவு செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.