Header Ads



சுதந்திரக் கட்சியை, உயிருடன் புதைத்து விட்டனர் - விக்டர் அந்தனி பெரேரா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான விக்டர் அந்தனி பெரேரா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

கொழும்பு வோக்ஸ்வோல் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று -20- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் கட்சியை சரியான இடத்திற்கு கொண்டு செல்லவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரான நாங்கள் கூறவிரும்புகிறோம்.

பாதுகாப்பு அமைச்சர் யார்? பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருந்தது யார்? ஈஸ்டர் தாக்குதலுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருகிறார்.

கோத்தபாய ராஜபக்ச போர் நடந்த காலத்தில் நாட்டை கைவிட்டு சென்ற நபர். அண்ணன் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் மீண்டும் இலங்கைக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் பதவியை பெற்றுக்கொண்டார். உலகில் எந்த நாட்டை அண்ணனும் தம்பியும் ஆள்கின்றனர். சர்வதேசத்தில் நிராகரிக்கப்பட்ட ஒருவர் எப்படி நாட்டை முன்னெடுத்துச் செல்வார்.

மகிந்த அமரவீரவும் தயாசிறி ஜயசேகரவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உயிருடன் புதைத்து விட்டனர். இதற்கு ஆதரவளிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் கேட்டுக்கொள்கிறேன் என விக்டர் அந்தனி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.