Header Ads



'ஹூ' சத்தம் போடுபவர்கள் தொடர்பில் கண்காணிப்பு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

நேற்று (15) பிற்பகல் எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஶ்ரீ லங்கா சுந்திர கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியுடன் சேர்ந்துள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து உருவாகவுள்ள புதிய கூட்டமைப்பு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு இடையில் உள்ள ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சூழ்ச்சியொன்று இடம்பெறுவதாகவும் "ஹூ" கூக்குரல் இடுபவர்கள் தொடர்பில் கண்காணிப்புடன் இருக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் ஆதரவாளர்களிடம் கேட்டுக் கொண்டார். 

No comments

Powered by Blogger.