Header Ads



இலங்கை முஸ்­லிம்கள் மீது, கடும் நெருக்­குதல் - சர்வதேச அமைப்பு கவலை, சமூ­கத்தை கரு­வ­றுக்கும் நீண்டகால திட்டம்

ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இலங்­கையில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட கடு­மை­யா­னதும் ஆபத்­தா­ன­து­மான நட­வ­டிக்­கைகள் நாட்டின் சமா­தா­னத்­துக்கும் பாது­காப்­புக்கும் பாரிய அச்­சு­றுத்­தல்­களை தோற்­று­வித்­துள்­ள­தாக ‘சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு’ வெளி­யிட்­டுள்ள புதிய அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உலகின் பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த புத்­தி­ஜீ­விகள், சிந்­த­னை­யா­ளர்­களை அங்­கத்­த­வர்­க­ளாக கொண்ட மேற்­படி ‘சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு’ இலங்­கையில் ஏப்ரல் 21 இல் இடம்­பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்­குதல் தொடர்பில் கடந்த வாரம் வெளி­யிட்­டுள்ள ‘இலங்­கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் எதிர்­கால வன்­மு­றை­களின் ஆபத்தைக் குறைத்தல்’ எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்கள் மீதான தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்த குழு­வினர் தெளி­வாக இனங்­கா­ணப்­பட்­டி­ருந்த நிலையில், இலங்­கையில் அர­சி­யல்­வா­தி­களும் சிங்­கள தேசி­ய­வா­தி­களும் ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தலை முஸ்லிம் சமூ­கத்தை துன்­பு­றுத்­து­வ­தையும் அவ­மா­னப்­ப­டுத்­து­வ­தையும் நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக கையாண்­டனர்.

குண்டுத் தாக்­கு­தல்­களில் 250 பேர் கொல்­லப்­பட்­டனர். இத் தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரி­யி­ருந்­தது. எனினும் இலங்­கையின் உள்ளூர் அமைப்­பான தேசிய தௌஹீத் ஜமா­அத்தே இத் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தாக பொலிசார் கூறி­யி­ருந்­தனர்.
விடு­தலைப் புலி­க­ளு­ட­னான போர் முடி­வுக்கு வந்த பின்பு ஒரே நாளில் நிகழ்ந்த மிக மோச­மான வன்­முறை இது­வாகும். எனினும் முஸ்­லிம்­களும் கிறிஸ்­த­வர்­களும் சம்­பந்­தப்­பட்ட மிகப் பாரிய வன்­முறை இடம்­பெற்­றது இதுவே முதன் முறை­யாகும்.

இத­னை­ய­டுத்து சுமார் 1800 முஸ்­லிம்கள் அவ­ர­ச­காலச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டனர். இன்று வரை இவர்­களில் 300 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் பலர் தாக்­கு­தல்­க­ளுடன் எந்த வகை­யிலும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளல்ல என அவர்­க­ளது குடும்­பத்­தினர் நெருக்­க­டிகள் குழு­விடம் தெரி­வித்­தனர்.

இதே­வேளை சிங்­கள பௌத்த தேசி­ய­வா­திகள் இச் சந்­தர்ப்­பத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பாரிய வன்­மு­றைகள், வெறுப்பு பிர­சா­ரங்கள், வர்த்­தக பகிஷ்­க­ரிப்­புகள் மற்றும் ஹிஜாப் அணிந்த பெண்கள் மீதான தாக்­கு­தல்கள், சேறு பூசும் ஊடக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தனர்.

மே மாதம் இரு தினங்­க­ளாக முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்­களை இலக்கு வைத்து பாரிய இன வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. இதில் ஒரு முஸ்லிம் நபர் கொல்­லப்­பட்­ட­துடன் நூற்றுக் கணக்­கான முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் அழிக்­கப்­பட்­டன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் ஈஸ்டர் தாக்­கு­தலைத் தொடர்ந்து மாத்­திரம் நிக­ழ­வில்லை. மாறாக ஆண்டு முழு­வதும் இவ்­வா­றான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

கடந்த வருடம் கண்­டி­யிலும் இதே போன்ற தாக்­குதல் சிங்­கள தேசி­ய­வா­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. சில இடங்­களில் பாது­காப்பு படை­யினர் சட்­டத்தை நிலை நாட்டத் தவ­றி­ய­துடன் வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு உத­விய­தா­கவும் சம்­ப­வங்கள் பதி­வா­கின.

சிங்­கள தேசி­ய­வாத அர­சி­யல்­வா­திகள் முஸ்லிம் சமூ­கத்தை கரு­வ­றுக்கும் நீண்ட கால வேலைத்­திட்­டத்­திற்கு புத்­து­ணர்ச்சி வழங்கி வரு­கின்­றனர்.

ஆண்டின் இறு­தியில் நாட்டில் தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்ள நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷவின் சகோ­தரர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ பாது­காப்பு அச்­சு­றுத்­தலை பிர­தான கருப்­பொ­ரு­ளாகக் கொண்டு பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வரு­கிறார்.

சில சிரேஷ்ட பிக்­கு­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களைத் தூண்­டு­வதில் பங்­காற்­றி­யுள்­ளனர். ஜூன் மாதம் இலங்­கையின் பிர­தான பௌத்த மத தலை­வர்­களுள் ஒரு­வ­ரான வர­கா­கொட சிறீ ஞான­ர­தன தேரர் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களை பகிஷ்­கி­ரிக்­கு­மாறும் சிங்­கள பெண்­க­ளுக்கு கருத்­தடை செய்­த­தாக முஸ்லிம் வைத்­தியர் ஒரு­வ­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட பொய்ப் பிர­சா­ரத்தை ஆத­ரிக்கும் வகை­யிலும் கருத்­து­களை வெளி­யிட்டார்.

இதே­வேளை இலங்­கையின் பல­வீ­ன­மா­னதும் பிள­வு­பட்­ட­து­மான தலை­மைத்­துவம் காத்திரமான பணிகளை முன்னெடுக்காது வேடிக்கை பார்த்தனர்.

இலங்கையின் தலைவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டுமானால் சட்டத்தை மதித்து நடக்கும் முஸ்லிம் பிரஜைகளை அந்நியப்படுத்துவதை நிறுத்துவதுடன் சீர்குலைந்துள்ள நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. – Vidivelli

2 comments:

  1. any body has the sinhala version of this article. please share with me.

    ReplyDelete
  2. இந்த கட்டுரை அரசாங்கத்தை குறை சொல்கிறது
    இது முஸ்லிம்கள் இணைந்த ஆட்சி.
    எனவே முஸ்லிம்களின் இந்த நிலமைக்கு முஸ்லிம்கள் தான் காரணம், மற்றய இனங்கள் அல்ல

    ReplyDelete

Powered by Blogger.