Header Ads



ரணிலுடன் மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உயர்பீட உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதிப்படுத்துவது மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்களிக்கும் விகிதத்தினை கூட்டுவது போன்ற கருத்துகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் பாயிஸ் உள்ளிட்ட கட்சியின் மூதூர் தவிசாளர் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

1 comment:

  1. அப்படியானால் ஒரு பேச்சு வார்த்தையும் நடக்காமலா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.ரணில் ஒரு தந்திர ஷாலி தானே.

    ReplyDelete

Powered by Blogger.