இன்று இணக்கப்பாடு எட்டப்பட்டால், நாளையே கூட்டணியை அமைப்போம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கேட்டாபய ராஜபக்ஷவை இன்று (03) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சந்திக்க உள்ளதாக ஐ.ம.சு.கூவின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பு - டார்லி வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சற்றுமுன்னர் -03- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இன்றைச் சந்திப்பின்போது, சின்னம் தொடர்பான சு.கவின் கோரிக்கைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டால், நாளையே(03) பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை அமைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்
Post a Comment