Header Ads



இறுதி நேரத்தில் குமார வெல்கம, விலகிக்கொண்டது ஏன்..?

சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட  தயாராகவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவு படுவதை தவிர்க்கவும் கட்சியின் நலனை  கருத்தில் கொண்டும் விலகியுள்ளதாக சு.க பாதுகாப்பதற்கான  அமைப்பின் பிரதான செயலாளர் சட்டத்தரணி ராஜிக கொடிதுவக்கு  தெரிவித்தார்.  

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் சில செயற்பாடுகளின்  காரணமாக  கட்சி பிளவுபடும் ஆபத்தான நிலையை  எதிர்கொண்டுள்ளதாகவும் பேச்சுவார்த்தைகளினூடாக கட்சியை  கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள  எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.