Header Ads



சஜித் பிரே­ம­தா­ச­விற்கு எதி­ராக, பிரச்­சா­ரம் செய்யமாட்டேன் - ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால

ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தய­ாரா­க­வில்லை. ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு எதி­ராக பிர­சா­ரங்­களை செய்யமாட்டோம் என சஜித் பிரே­ம­தா­ச­வு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விடம் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் இறுதி நிலைப்­பாட்டின் பின்னர் சஜித்தின் வேண்­டு­கோ­ளுக்கு பதில் கூறு­வ­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச  கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் மற்றும் கட்­சியின் தவி­சாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் நேற்று முன்­தினம் இரவு  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­தி­ருந்த நிலையில் தேசிய அர­சாங்கம் குறித்த பல விட­யங்­களை கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இந்த சந்­திப்பில் ஜனா­தி­ப­தி­யுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர மற்றும் லசந்த அல­கி­ய­வன்ன ஆகி­யோரும்  பங்­கேற்­றி­ருந்­தனர்.

கடந்த வாரம் ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் மூல­மாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜெய­சே­க­ர­விற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட அழைப்புக் கடி­தத்தின் பிர­காரம் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த பேச்­சு­வார்த்­தையில் ஆரம்­பத்தில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிப்­பது குறித்தும் பொதுக் கூட்­ட­ணி­யாக ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் பய­ணிப்­பது குறித்தும் ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினால் ஒத்­து­ழைப்­பு­களை வழங்க முடி­யமா எனவும் வின­வி­யுள்­ளனர்.

எனினும் இதற்கு பதில் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன :- ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் தேசிய அர­சாங்­க­மாக கடந்த நான்­கரை ஆண்­டு­களில் அர­சாங்கம் ஆட்சி செய்யும் விதத்தில் பாரிய பிரச்­சி­னைகள் உள்­ளன. மக்­க­ளுக்கு இன்று அர­சாங்கம் மீதான நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்ள நிலையில் மீண்டும் கூட்­ட­ணியை அமைக்க முடி­யாது. அது­மட்டும் அல்ல ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் கொள்கை அளவில் கூட பாரிய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. இன்று ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கைத்­திட்­டங்­களை பகி­ரங்­க­மாக விமர்­சித்­துக்­கொண்டு தேர்­தலில் எவ்­வாறு கூட்­ட­ணியை அமைக்க முடியும்? ஆகவே இது ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காத விட­ய­மாகும். மேலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கூட்­ட­ணியை அமைக்க நினைக்­க­வில்லை என்று தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் கருத்­துக்கள் தொடர்பில் வேட்­பாளர்  சஜித் கூறு­கையில், ஜனா­தி­பதி முன்­வைத்த கார­ணி­களை ஏற்­றுக்­கொள்­கின்றோம்.   கடந்த  நான்கு ஆண்­டு­களில் தவ­றுகள் நடக்­காமல் அல்ல. ஆனால் எனது ஆட்­சியில் அவ்­வாறு  எந்த தவ­று­களும் நடை­பெ­றாத வகையில் நான் பார்த்­துக்­கொள்­கிறேன். எனக்கு சக­ல­ரதும் ஆத­ரவு வேண்டும் என்றே நினைக்­கிறேன் அதற்­கா­கவே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யையும் இணைந்­துக்­கொண்டு பய­ணிக்க முயற்­சிக்­கின்றேன் என்று கூறி­யுள்ளார்.

எனினும் தாம் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில் அவர்­க­ளுடன்  கூட்­ட­ணியை அமைக்­கவே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஏக­ம­ன­தாக தீர்­மா­னித்­துள்­ளதை சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி, இந்த தேர்­தலில்  சஜித் பிரே­ம­தா­ச­விற்கு எதி­ரான பிர­சா­ரங்­களை நான் செய்ய மாட்டேன். ஆனால் நாம் இப்­போதும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணையும் பேச்­சு­வார்த்­தையே முன்­னெ­டுக்­கிறோம். அதில் வெற்றி பெற்றால் நாம் அவர்­க­ளுடன் இணைந்தே செயற்­ப­டுவோம் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.  

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் தமது கொள்கை திட்டத்துக்கு இணங்கினால் நாம் அவர்களுடன் கைகோர்ப்பதே எமக்குள்ள தெரிவாகும் என்ற காரணிகளை கூறியுள்ளார்.  எவ்வாறு இருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதி நிலைப்பாட்டின் பின்னர் தங்களின் கோரிக்கைகள் குறித்து பதில் தெரிவிக்கப்படும் என்பதை ஜனாதிபதி கூறியுள்ளார் 

No comments

Powered by Blogger.