சுதந்திர கட்சியை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைக்க சந்திரிக்கா முயற்சி
சுதந்திர கட்சியை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைக்கும் இரகசிய முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துள்ளது.
ஆனால் இதனை பிரித்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேற்கொண்டு வருகிறார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆளுமையற்ற தலைமையுடன் சுதந்திர கட்சியை இணைத்து, கட்சியை அழிக்க முயற்சிக்க வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்வதாக டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
Post a Comment