Header Ads



பாயிஸ் மொட்டில் இணையவில்லை - குப்பை பிரச்சினைக்கு கோத்தபயவிடமிருந்து சாதக பதில்


புத்தளம் சர்வமத குழுவினர் இன்று (31)  கோத்தபாய ராஜபக்ஷவை கொழும்பில் சந்தித்துள்ளனர்.

கொழும்பு குப்பைகளை தான் புத்தளத்தில் கொட்டுவதை எதிர்ப்பதாகவும், அந்தந்த பகுதி குப்பைகளை அங்கேயே கொட்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன் தான் சீனாவுக்கு சென்ற போது குப்பைகளை முகாமை செய்வது குறித்து கற்று அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை புத்தளம் சர்வமத குழுவினர் சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர்களில் கோத்தபாயவிடமிருந்தே இவ்வாறான சாதக பதில் கிடைக்கப்பெற்றதாக புத்தளம் நகரபிதா பாயிஸ் Jaffna Muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.

அதேவேளை பாயிஸ் மொட்டில் இணைந்ததாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.  எனினும் அதில் உண்மையில்ல என அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.