சு.க. யை இழிவுபடுத்த வேண்டாம் - கூக்குரல் எழுப்புவதனால் கோத்தபாய வாக்குகளை இழக்க நேரிடும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யை இழிவுபடுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார மேடைகளில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கூக்குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.
இந்த எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் மஹிந்த பணிப்புரை விடுத்துள்ளார்.
துமிந்த திஸாநாயக்க, ஜோன் செனவிரட்ன, டீ.பி.ஏக்கநாயக்க, தரானாத் பஸ்நாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் மேடைகளில் தோன்றும் போது பொதுஜன முன்னணி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டியிருந்தனர்.
பிரச்சார மேடைகளில் கூக்குரல் எழுப்புவதனால் கோத்தபாயவின் வாக்குகளையே இழக்க நேரிடும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment