பாராளுமன்ற டுவிட்டர் மீது தாக்குதல் - ஆபாசப் படங்களும் பதிவேற்றப்பட்டன
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கிற்கு இணைய வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 25 நிமிடங்கள் இணைய வழி தாக்குதலாளிகள் அதனை கையகப்படுத்தியிருந்தாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, அந்த பக்கத்தில் தரவேற்றியிருந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் முகமாக அந்த பக்கத்தில் ஆபாசபடங்கள் பதிவேற்றியிருந்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் நாடாளுமன்ற தொலைத்தொடர்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக அந்த டுவிட்டர் கணக்கின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியதாக அந்த பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அந்த கணக்கில் தரவேற்றப்பட்டிருந்த அந்த படங்களும் அகற்றப்பட்டுள்ளன.
Post a Comment