Header Ads



"பொதுஜன பெரமுன மொட்டுச் சின்னத்தை, மாற்றினால் கிராம மக்கள் கோபித்து கொள்வார்கள்"

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வெற்றி பெறக் கூடிய இலகுவான சின்னம் தாமரை மொட்டுச் சின்னம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது சின்னமான தாமரை மொட்டுச் சின்னத்தை மாற்றினால், கிராமத்தில் உள்ள மக்கள் கோபித்து கொள்வார்கள்.

நாட்டின் அரசியல் பயணத்தை மாற்றிய சின்னமாக பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தை குறிப்பிடலாம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.