Header Ads



உயிருடன் இருந்தபோதே பக்தாத்தியின், உள்ளாடையை திருடிய உளவாளி - அதுவே படுகொலைக்கு உதவியது

மரபணு  பரிசோதனைக்கு உதவும் என்பதற்காக ஐஎஸ் தலைவர் அல்பக்தாதியின் உள்ளாடையை தங்களது உளவாளியொருவர் திருடிவந்தார் என சிரிய ஜனநாயக படையணியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடசிரியாவில் அல்பக்தாதி மறைந்திருந்த பகுதியை கண்டுபிடிப்பதில் தாங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியதாக சிரியாவின் குர்திஸ் படையணியான சிரிய ஜனநாயக படையணியினர் தெரிவித்துள்ளனர்.

அபுபக்கர் அல் பக்தாதிக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் எங்கள் உளவாளியொருவரை அனுப்பி  அவரின் உள்ளாடையை எடுத்தோம் அதன் பின்னர் அதனை அடிப்படையாக வைத்து அந்த வீட்டில் இருப்பவர் அவர்தான் என்பதை உறுதி செய்த பின்னர் அமெரிக்க படையினர் அந்த வீட்டிற்கு செல்வதற்கு உதவினோம் என சிரிய ஜனநாயக படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 15 முதல்  நாங்கள் சிஐஏயுடன் இணைந்து அல்பக்தாதியை கண்டுபிடிப்பதிலும் கண்காணிப்பதிலும் ஈடுபட்டோம் என  பொலட் கன் என்ற எஸ்டிஎவ்  அதிகாரி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

எங்களுடைய உளவாளியொருவர் பக்தாதி மறைந்திருந்த வீட்டிற்கு சென்றார்,என தெரிவித்துள்ள அவர் அல்பக்தாதி அடிக்கடி தான் இருக்கும் இடத்தை மாற்றுவார் துருக்கி எல்லைக்கு அருகில் இருக்கும் ஜெரபிலசிற்கு அவர் சென்றார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அல்பக்தாதியின் மறைவிடத்திற்கு சென்ற எங்கள் உளவரி பக்தாதியின் உள்ளாடையை மரபணுபரிசோதனைகளிற்காக எடுத்துவந்தார்,அந்த வீட்டில் இருப்பவர்  அல்பக்தாதி என்பதை உறுதி செய்வதற்காகவே இதனை செய்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சமீபத்தில் துருக்கியின் தாக்குதல் காரணமாக அமெரிக்க படையினர் விலகியமையால் பக்தாதிக்கு எதிரான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி நிமிடம் வரை நாங்கள் இந்த நடவடிக்கைக்கு உதவினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தங்கள் உளவாளியொருவர் அல்பக்தாதியுடன் இறுதிவரையிருந்ததை சிரிய ஜனநாயக படையின் தளபதி மஸ்லூம் கொபானி உறுதி செய்துள்ளார்.

தங்கள் உளவாளி ஒரு காலத்தில் ஐஎஸ் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றினார்.அதன் பின்னர் அவரிற்கு எதிராக பழிவாங்குவதற்காக உளவாளியாக மாறினார் தாக்குதல் இடம்பெற்றவேளை அந்த இடத்திலேயே காணப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.