ஜனாதிபதியாக எனது செயற்பாடுகளில், திருப்த்தியில்லையா..? உடனடியாக என்னை நீக்கிவிடுங்கள் - சஜித்
ஜனாதிபதியாக தான் செய்யும் செயற்பாடுகள் மக்களை திருப்திப்படுத்தவில்லை என்றால் உடனே தன்னை பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு புறநகரான மொறட்டுவ நகரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“ தாம் ஜனாதிபதியாக தெரிவாகினால் புதிதாக அமைச்சர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை .
ஜனாதிபதியாகினால் இனி குண்டுகள் துளைக்காத வாகனங்களை ஒருபோதும் இறக்குமதி செய்யப்போவதும் இல்லை” என்றும் அவர் கூறினார்.
Post a Comment