Header Ads



பிரதமர் யார்...? பதில்கூற மறுத்த சஜித்

ஜனாதிபதி தேர்தலின் பின்னரும், பிரதமர் பதவியில் ரணில் தொடர்வாரா? இல்லையா? என்பது தொடர்பாக பதில் வழங்க, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுகின்ற போதும், கட்சியின் தலைமைப் பதவியிலும், பிரதமர் பதவியிலும் மாற்றம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சஜித் பிரேமதாசவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கான பதிலை நிராகரித்த அவர், வரும் நொவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறவுள்ளதே தவிர, நாடாளுமன்றத் தேர்தல் இல்லை என்று கூறினார்.

அதேநேரம் தாம் எந்தவிதமான நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.