Header Ads



"சந்திரிக்காவினால் சுதந்திரக் கட்சியை ஒருபோதும் பாதுக்க முடியாது"

சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டே பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா   பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஒருபோதும் சுதந்திரக் கட்சியை   பாதுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து இன்று -23- இராஜகிரியவில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

2015 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் முன்னெடுத்த ஒரு சில தவறான தீர்மானங்களே  கட்சியை கடந்த காலங்களில்  பலவீனப்படுத்தியது. தவறுகளை திருத்திக் கொண்டு  சிறந்த  தீர்மானத்தை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

சுதந்திர கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ நிச்சயம் பெற்றிப் பெறுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. சுதந்திர கட்சியினரது அரசியல் தீர்மானங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் அனுமதியும் கிடையாது என்றும் கூறினார்.

No comments

Powered by Blogger.