Header Ads



நாய்களை கட்டிவைத்து ஆதரவளிக்குமாறு கோரிக்கை

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்தின் அதிகாரிகள் இத்தினங்களில் வீடுகளுக்கு வரவுள்ளதால், வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை கட்டி வைத்து ஆதரவளிக்குமாறு இன்று (29) முற்பகல் அத தெரண ரிவி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கோரிக்கை விடுத்தார். 

தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மிகவும் பாதுகாப்பாக பரிமாற்ற வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். 

அதன்படி, தபால் வாக்கெடுப்பு மிகவும் முக்கியமானது என தெரிவித்த அவர், தபால் வாக்கினை செலுத்துவதற்கு முன்னரும் மற்றும் வாக்கினை செலுத்திய பின்னரும், தபால் திணைக்களத்தின் ஊடாகவே ஆவணங்கள் பரிமாற்றப்படுகின்றதாக அவர் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.