கோத்தாபயவுக்கு மேர்வின், விடுத்துள்ள சவால்
தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்படும் நிதியை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் வெளிப்படுத்துமாறு, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு சவால் விடுத்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக மாத்தறையில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.
தனது சவாலை ஏற்றுக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ பதில் வழங்கினால், எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் மேடையில் தான் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Once he become president, he will arrest all culprits like, who were behind robbing the country and enjoying with your kit and kin.
ReplyDeleteyou will be punished to pay back what you swindled.