Header Ads



அக்குறணை பிரதேச சுயேட்சைக்குழு, கோட்டாவுக்கு ஆதரவு - பசிலிடம் நேரில் தெரிவிப்பு

-JM.Hafeez-


அக்குறணை பிரதேச சபையின் தலைவர்  இஸ்திஹார் இமாமுதீன் உற்பட  சுயேச்சைக்  குழுவினர் தமது ஆதரவை  கோட்டாபய  ராஜபக்‌ஷ அவர்களுக்கு  வழங்க தீர்மானித்துள்ளனர்.
இம் முறை இடம்பெறும்  ஜனாதிபதித்  தேர்தலின்  ஶ்ரீ  லங்கா  பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  கோட்டாபய  ராஜபக்‌ஷ அவர்களுக்கு  வழங்க உள்ளதாக மேற்படி கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ  அவர்களைச் சந்தித்து   (28.10.2019)இம் முடிவைத் தெரிவித்துள்ளனர்.
  .
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது  ஒட்டகச் சின்னத்தில்  சுவேட்சை குழுவில் போட்டியிட்டு நான்கு உறுப்பினர்களை  இச் சுவேட்சைக் குழு பெற்றது. அக்குறணை பிரதேச சபைத் தேர்தலின் போது கூடிய  உறுப்பினர்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு அதன் அதிகாரத்தைகைப்பற்ற முடியாத படி   ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன்  இணைந்து சபையின் அதிகாரத்தை மேற்படி நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழு கைப்பற்றியது.  ,தன் காரணமாக சுயேட்சைக் குழு தலைவர் பதவியை பெற்றுக் கொண்டதுடன்  பொது ஜன பெரமுனவின் சரத் அமர கோன்  உப தலைவராகவும்  தெரிவாகினர்.

 ஜனாதிபதித்  தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அக்குறணை பிரதேச சபையின் தலைவர்  அடங்களாக மேற்படி சுவேச்சைக் குழுவின் ஆதரவு யாருக்கு என்பதை அறிய பிரதேச மக்கள் மத்தியில்  ஆர்வம்  ஏற்பட்டிருந்த்து. தற்போதைய அறிவிப்பை அடுத்து  அது தீர்க்கப் பட்டுள்ளது. மேற்படி பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட படம்.



No comments

Powered by Blogger.