சஜித்தை வேட்பாளராக நியமித்த பின்தான், எனக்கு தூக்கமே வந்தது - லக்ஷ்மன் கிரியெல்ல
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமித்ததன் பின்னர்தான் எனக்கு தூக்கமே வந்தது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை எதிர்ப்பார்த்திருந்த எனக்கு அவரை ஏகமனதாக அறிவித்ததன் பின்னர்தான் சரியாக தூக்கம் வந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எந்தவித சர்ச்சையும் இன்றி கட்சிக்கு நியமித்துக் கொள்ள முடிந்தது.
மிகவும் சமாதானமான ஒரு தீர்மானத்தை கட்சி எடுத்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் வெற்றிக்கு கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment