Header Ads



முஸ்­லிம்­ சமூகம் மீதான, அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது...?

நாட்டில் தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்ள நிலையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சிறு சிறு இன­வாத தாக்­குதல் சம்­ப­வங்­களும் அதி­க­ரிக்க ஆரம்­பித்­துள்­ளன. கடந்த வாரம் மாத்­தறை மாவட்­டத்தின் கிரிந்த பிர­தே­சத்­திலும் நேற்று முன்­தினம் அவி­சா­வளை, நாபா­வ­ல­விலும் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் இதற்கு நல்ல உதா­ர­ண­மாகும்.

அவ்­வப்­போது ஏற்­படும் தனிப்­பட்ட முரண்­பா­டு­களை வேண்­டு­மென்றே பூதா­க­ர­மாக்கி இரு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­யாக காண்­பித்து வன்­மு­றை­களைத் தோற்­று­விப்­ப­துடன் அவற்றை ஏனைய பிர­தே­சங்­க­ளுக்கும் பரவச் செய்­வதே இவ்­வா­றான இன­வாத சக்­தி­களின் நோக்­க­மாகும்.

தேர்தல் ஒன்று நெருங்­கு­கின்ற நிலையில் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் நிலைப்­பா­டு­களை முன்­னி­றுத்­தியும் இவ்­வா­றான தாக்­கு­தல்கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டு­வ­தற்­கான சாத்­தியக் கூறுகள் இருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அந்த வகையில் வடக்கு கிழக்­குக்கு வெளியே பெரும்­பான்மை சமூ­கத்­துடன் இரண்­டறக் கலந்து வாழும் மக்கள் அடுத்து வரும் நாட்­களை மிகவும் கவ­ன­மா­கவே எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அதே­போன்­றுதான் ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களின் பின்னர் ஆரம்­ப­மான முஸ்­லிம்­களை அசௌ­க­ரி­யத்­துக்­குள்­ளாக்கும் சம்­ப­வங்­களும் இன்று வரை தொடர்ந்த வண்­ண­மே­யுள்­ளன. கடந்த வாரம் அவ்­வா­றான இரு சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

கொழும்பு தேசிய கண் வைத்­தி­ய­சா­லையின் உட்­புறம் வீடியோ எடுத்­த­தாக குற்­றம்­சாட்டி அப்­பாவி முஸ்லிம் பெண் ஒருவர் அங்­கி­ருந்த பாது­காப்பு ஊழி­யர்­களால் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்டார். பின்னர் பொலிசார் வர­வ­ழைக்­கப்­பட்டு அப் பெண் மரு­தானை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு வாக்­கு­மூலம் பெறப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­பட்டார். அங்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த தனது கண­வரை வெளி­யூ­ரி­லுள்ள தனது பிள்­ளை­க­ளுக்கு நேர­டி­யாக வீடி­யோ­வாக காண்­பித்த போதே அவர் இவ்­வாறு அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்டார்.

அதே­போன்­றுதான் கடந்த வாரம் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற சர்­வ­தேச புத்­தக கண்­காட்­சியை வீடியோ எடுத்­த­தாக குற்­றம்­சாட்டி நான்கு முஸ்லிம் இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் நாட்டில் பர­வ­லாக இடம்­பெ­று­வ­தா­னது முஸ்லிம் மக்­களை மிகுந்த அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. இதனை கடந்த வாரம் சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு வெளி­யிட்ட அறிக்­கையும் உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

”தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்கள் மீதான தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்த குழு­வினர் தெளி­வாக இனங்­கா­ணப்­பட்­டி­ருந்த நிலையில், இலங்­கையில் அர­சி­யல்­வா­தி­களும் சிங்­கள தேசி­ய­வா­தி­களும் ஏப்ரல் குண்டுத் தாக்­கு­தலை முஸ்லிம் சமூ­கத்தை துன்­பு­றுத்­து­வ­தையும் அவ­மா­னப்­ப­டுத்­து­வ­தையும் நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மாக கையாண்டு வரு­கின்­றனர்” என அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

”இலங்­கையின் தலை­வர்கள் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான தாக்­கு­தல்­களைத் தவிர்க்க வேண்­டு­மானால் சட்­டத்தை மதித்து நடக்கும் முஸ்லிம் பிர­ஜை­களை அந்­நி­யப்­ப­டுத்­து­வதை நிறுத்­து­வ­துடன் சீர்­கு­லைந்­துள்ள நாட்டின் பாது­காப்புக் கட்­ட­மைப்பை மறு­சீ­ர­மைப்­பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அந்த அறிக்­கையில் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த வகை­யிலும் இலங்­கையில் முஸ்லிம் சமூகம் தொடர்ச்­சி­யாக துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­ப­டு­வதை தடுத்து நிறுத்துவதற்கு நாட்டின் தலைமைகள் முன்வர வேண்டும். தேர்தல் அண்மிக்கும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதைக் கட்டுப்படுத்துவதற்கான அழுத்தங்களை முஸ்லிம் தலைமைகள் வழங்க முன்வர வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகமும் இனவாதிகளின் வலைகளில் சிக்காது எதிர்வரும் நாட்களில் மிகுந்த நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli

1 comment:

  1. neengal kaadi koduthu kodaari kaampugalaaga irukkum varai needikkum

    ReplyDelete

Powered by Blogger.