கோத்தாபய ஜனாதிபதியானதும் அடிப்படைவாதத்தை, போதிக்கும் கற்கை நிலையங்கள் அழிக்கப்படும் - ரத்ன தேரர்
தேசிய பாதுகாப்பினையும் பொருளாதாரத்தினையும் பலமான தலைமைத்துவத்தினாலேயே கட்டியெழுப்ப முடியும். தேசிய உற்பத்திகளுக்கும் தேசிய மரபுரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷநிச்சயம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
கடவத்த நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
இராணுவத்தினரது பலத்தினையும் இளைஞர்களினது பலத்தினையும் ஒன்றுபடுத்தி நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும். தேசிய பொருளாதாரத்தினையும் தேசிய பாதுகாப்பினையும் முன்னேற்றும் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. கொள்கையினை அடிப்படையாகக்கொண்டே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன்.
அடிப்படைவாத கருத்துக்களை போதிக்கும் கற்கை நெறிகளையும், அடிப்படைவாதத்தினையும் முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும். குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தேசிய உற்பத்திகளையும் இன்று வீழ்ச்சியடையச் செய்துள்ளார்கள். இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை அரசியல்வாதிகள் இன்று வெற்றிகரமாக செய்துள்ளார்கள். நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்கள் அனைத்தும் முழுமையாக இல்லாதொழிக்கப்படும். பலமான தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற்றால் அனைத்து இன மக்களும் இலங்கையர் என்ற அடையாளத்தில் தேசிய நல்லிணக்கத்துடன் வாழ்வார்கள் என்றார்.
Adu sari nagga paatuttu chumma erippam ok neegga nadattuga
ReplyDeleteஉங்கள் தீவிர பிரச்சாரத்தால் பெரும் பின்னடைவை தான் கோத்தா அடைவார். பிரச்சாரத்தின் மூலம் கிடைக்கும் (சிங்கள) வாக்குகளை விட இழக்கும் (முஸ்லீம்) வாக்குகள் தான் அதிகம்.
ReplyDeleteபேருவலை வாழ் சோனகச் சமூகமே, உங்கள் ஊரில் இருந்து இந்த நாட்டுக்கும் உலகத்துக்கும் அறிவொளி பாய்ச்சும் ஜாமிஆ நளீமிய்யாவுக்கு ஆப்புவைக்க இந்த காபிர் சனாதிபதி வேட்பாளன் துவேச கோதாவுடன் இணைந்து இந்தகைங்கரியத்தைச் சாதிக்க தயாராகின்றான். எனவே,பேருவல, சீனன்கோட்டையில் வாழும் எந்த ஒரு முஸ்லிம் ஆண்களும்பெண்களும்கோதாபாயாவுக்கு வாக்களிக்க தயாராகி இருந்தால் உடனடியாக உங்கள் சிந்தனையை சீர்தூக்கி ஆராய்ந்து இந்த நாட்டில் முஸ்லிம்களின் இருப்புக்குத் தொல்லையில்லாத ஒருவரை சனாதிபதியாக நியமிக்க உதவுங்கள்.
ReplyDeleteகுயில் கூவியதற்காக அது குயில்கூடாகப்போரதுயில்ல...அது காகக்கூடுதான்... அதமாதிரிதான்
ReplyDelete