Header Ads



நான் சிறந்த மனிதாபிமானி, மக்களின் ஆயுளை அதிகரிப்பதே எனது நோக்கம்: சஜித்

புதிய தலைமைத்துவத்துடன் கூடிய தூய்மையான அரசாங்கத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிலாபம் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் ஆயுள் காலத்தை அதிகரிப்பதே எனது நோக்கம். ஜனாதிபதி பதவியை தனக்கு வழங்கினால், நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறு செய்த எந்த நபரையும் தனது அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதில்லை எனவும் எந்த கஷ்டங்கள் இருந்தாலும் பொதுமக்கள் தன்னிடம் வந்து அதனை கூற முடியும் எனவும் தான் சிறந்த மனிதாபிமானி எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. கடவுள் அவதாரம் ; பதவி வெறி ஆபத்தானது

    ReplyDelete

Powered by Blogger.