Header Ads



நாட்டு மக்களின் இதயத்துடிப்பை உணர்ந்த, அரச நிர்வாகத்தை ஏற்படுத்துவேன் - சஜித்

நாட்டு மக்களின் இதய துடிப்பை உணர்ந்த ஒரு அரச நிர்வாகத்தை ஏற்படுத்தவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

காலி அக்மீமன போத்தல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். 

´ஒன்றிணைந்து முன்னோக்கி´ என்ற தொனிப்பொருளில் இந்த பொதுக் கூட்டம் இடம்பெற்றது. 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்... 

´செயற்திறன்மிக்க அரசாங்கம், மக்களின் இதய துடிப்பை உணர்ந்த அரச நிர்வாகம் மற்றும் கீழ்மட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும். 

நாட்டில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடும், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் நீதிமன்றங்களின் மூலம் குற்றவாளிகள் என கருதப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க தயங்க போவதில்லை´ என்றார். 

No comments

Powered by Blogger.