Header Ads



முதுகெலும்புடைய ஜனாதிபதியாக, மக்களுக்கு சேவையாற்றுவேன் - சஜித்


நான் ஆட்சிக்கு வந்தால் அதிகாரம் கொண்ட, முதுகெலும்புள்ள ஜனாதிபதியாக மக்களுக்கு சேவையாற்றுவேன். பழைய தாளத்துக்கு ஆடமாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதான கூட்டமொன்று இன்று -13- வெள்ளவாய பிரதேசத்தில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் இதில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இளம் சமுதாயத்திருக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என்பதும், பெண்கள் பொருளாதார ரீதியில் சிறப்பாக வாழக்கூடிய நிலைமைகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். 

நானும் எனது அரசாங்கமும் பலமானதும் சிறப்பானதுமான இலங்கையை கட்டியெழுப்புவோம். அதில் நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும் என்ற வாக்குறுதியை கொடுக்கின்றேன். 

அதேபோல் தேசிய பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. எனது அரசாங்கத்தில் சரத் பொன்சேகா பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றுவார். அதேபோல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதி என்ற ரீதியில் நானும் சகல பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறினார். 

3 comments:

  1. BY THIS SPEECH HE SAJITH IS ACCEPTING THAT CURRENT LEADER OF THE COUNTRY HIS AMBA YALUWA(BEST FRIEND)MAITHREE HAS NO BACK BORNE.(MUDUGU ELLUMBO)

    ReplyDelete
  2. இந்த நாட்டில் ஆயரமாயிர்ம் வருடங்கள் வாழப்போவதாக எண்ணிய கற்பனையில் தனக்காகச் சட்டம் அமைந்து பெண்ணை ஆணாக மட்டும் முடியாத ஏனைய அத்தனையையும் ஆற்றக்கூடிய வலிமையும் சகல அதிகாரமும்கொண்ட சனாதிபதிக்குரிய சட்டத்தை தயார்செய்துவைத்துவிட்டுஜே. ஆர்சென்றுவிட்டார். அதன்பிறகு வந்த சனாதிபதிகள்ஜே.ஆர் அளவ மூளையோ சிந்தனா ஆற்ற லோ இல்லாவிட்டாலும் அவர்களின் உச்ச சட்ட அதிகாரத்தை அளவுக்கு அதிகமாகப் பாவித்து சொற்ப காலம் ஆட்சிசெய்துபோய் விட்டார்கள். இதையெல்லாம் பார்த்து தனக்கு சாதகமான சனாதிபதியைவைத்து சிறகும், பறக்கும் ஆற்றலுமற்ற சனாதிபதி இந்த நாட்டை ஆட்சி செய்வதை உறுதி செய்து அந்த அதிகாரம் அனைத்தையும் பாராளுமன்றம் என்றபெயரில் பிரதமரின்கையில் சட்டத்தை முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு சட்டத்தை அமைத்து அந்த சட்டத்தின் கீழ் ஆட்சிசெய்ய தகுதி வாய்ந்தவன் நான் மட்டும் தான் என இந்த நாட்டிலும் உலகிலும் காட்ட முயற்சிசெய்து தனக்குப்பின்னால் யார் சனாதிபதியாக வந்தாலும் அவர்வெறும் கார்ட்போர்ட் சனாதிபதி, சகல ஆதிக்கமும் வல்லமையும் கொண்டவன் நான் என தற்போது நிரூபித்துக்கொண்டிருக்கும் ரணில் அவர்கள், எதிர்வரும் காலங்களில் சஜித்தை பொம்மை சனாதிபதியாக ஆட்சிசெய்வதைக் கனவு காண ஆ சைப்பட்டுக்கொண்டிருக்கின்றார். இந்த நாட்டில் அரசியல் அரங்குக்கு வந்த எந்த நபராவது இந்த நாட்டு மக்கள், நாடு கருதி எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  3. Sajith come to the power.ranil will go home by next parliment election.insha allah.unp working comity will support sajith.sajith have good confident and good intention to bring the country forward.may allah bless our country from bad ruler again

    ReplyDelete

Powered by Blogger.