Header Ads



சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு


ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவையில் இன்று இடம்பெற்ற பிரசார நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இந்தநிலையில் உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை இன்னும் சில நாட்களில் வெளிப்படுவார்கள்.

இவர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எதிர்காலத்தில் பாதுகாப்பர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுபெரமுனவுடன் தேர்தல் உடன்பாடு ஒன்றை செய்துக்கொண்டுள்ள நிலையிலேயே அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தகவல் வெளியாகியுள்ளது

No comments

Powered by Blogger.