சு.க. தலைமையகத்தை கைப்பற்றப் போவதாக, குமார வெல்கம எச்சரிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முதலில் கொழும்பு டாலி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தை கைப்பற்ற போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இதனை ஜனநாயக ரீதியாக செய்ய போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பது என எடுக்கப்பட்ட தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் சூழ்ச்சி.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பது என்பது சூழ்ச்சியாளர்களின் கட்சியை அழிக்கும் அருவருப்பான நடவடிக்கை எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment