Header Ads



சஜித் ஜனாதிபதியானதும், அடுத்த பிரதமரை செய்வார் - ஹர்ச

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் அவருக்கு முழுமையான சுதந்திரம் இருப்பதாக அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற அதிகமாக போராடியவர்களில் நானும் ஒருவன். பிரதமரை தெரிவு செய்ய சஜித் பிரேமதாசவுக்கு பூரண சுதந்திரம் உள்ளது.

அவ்வாறு தெரிவு செய்யும் பிரதமர் ஊழல், குற்றச்சாட்டு இல்லாத திறமையான தொழில்சார் நிபுணர் மட்டுமல்ல, வேலை செய்யக் கூடியவராக இருப்பார். இதனால், அந்த தீர்மானத்தை நேரடியாக சஜித் பிரேமதாச எடுப்பார் எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ரணில் தானே?? கடை ஒன்று, பெயர் பாளை தான் வேறு

    ReplyDelete

Powered by Blogger.