Header Ads



அகில இலங்கை முஸ்லிம்லீக் வாலிப, முன்னணிகளின் சம்மேளன புதிய நிர்வாக சபை


அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் 49ஆவது வருடாந்த மகாநாடு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் கலாநிதி பி.எம்.பாரூக் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் இரண்டாண்டுகளுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தேசியத் தலைவராக சுங்கத் திணைக்கள  சிரேஷ்ட அதிகாரி லுக்மான் ஷஹாப்தீனும்,பொதுச் செயலாளராக அல்ஹாஜ் எம்.இஸட்.அஹமத் முனவ்வரும்,பொருளாளராக இபாம் ஹனபியும்,உப தலைவர்களாக எம்.என்.எம்.ஷாம் நவாஸ்,எம்.அஜ்வத்தீன்,அல்ஹாஜ் பௌஸர் பாரூக்கும்,உதவி செயலாளர்களாக அஷ்ரப் அலி,பியாஸ் முஹம்மதும்,உதவிப் பொருளாளராக எம்.டீ.எம்.இல்யாஸும்,சம்மேளனத்தின் தேசிய பணிப்பாளராக எஸ்.எம்.இஸ்மத்தும், சம்மேளனத்தின் மாகாணப் பணிப்பாளர்களாக 9பேரும் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களாக 10 பேரும்  சம்மேளன தெரிவுக் குழுவின் சிபாரிசுகளுக்கமைய நிறைவேற்றுக் குழுவால் தெரிவுசெய்யப் பட்டு மகாநாட்டின் போது அனைவராலும் ஏற்று அங்கீகரிக்கப்பட்டனர்.

மேற்படி புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் மகாநாட்டின் போது சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டர்.

எம்.எல்.எஸ்.முஹம்மத்


No comments

Powered by Blogger.