Header Ads



மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் புறப்பட்ட கோத்தபாய

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச உட்பட சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 12.50க்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் கோத்தபாய எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார்.

No comments

Powered by Blogger.