Header Ads



'யாழ்ப்பாணத்திலிருந்து சென்னையை ஒரு மணித்தியாலத்தில் சென்றடையலாம்'


யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையில், விமான சேவைகளை நடத்துவதற்கு மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் எச்எம்சி.நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நொவம்பர் 1ஆம் நாள், தொடக்கம் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில், விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளாந்த விமான சேவைகளை நடத்த அலையன்ஸ் எயர் நிறுவனம் முன்வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்வதற்கு, 50 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலமே தேவைப்படும்.

யாழ்ப்பாணம்- சென்னை இடையே விமானங்களை சேவையில் ஈடுபடுத்த மேலும் பல நிறுவனங்கள் முன்வரும் என்று நம்புகிறோம்.” என்றும் அவர் கூறினார்.

1 comment:

Powered by Blogger.