Header Ads



பாகிஸ்தானை அதன் மண்ணில் வெள்ளையடிப்புச்செய்து, வரலாற்றுச்சாதனை படைத்த இலங்கை


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களைப் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

பதிலுக்கு 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் சொய்ல் 52 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். 

பந்து வீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

அதன்படி, மூன்றாவது ரி 20 போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. 

தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வௌ்ளையடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. வரலாறு,சாதனை இளம் அணி சாதித்து விட்டது.t20 போட்டியில் 1 இடத்தில் உள்ள Pakistan அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தின் புதிய வரலாறை எழுதிய இளம் சிங்கங்கலுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Well done Sri Lanka. What happened to the Pakistan team?

    ReplyDelete

Powered by Blogger.