Header Ads



நான் ஜனாதிபதி வேட்புரிமை பெற, ஹக்கீம் பல திட்டங்களை மேற்கொண்டார் -சஜித்

நாட்டு மக்களின் நாயகன் தாமே என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனாதிபதி வேட்புரிமை மிக இலகுவில் கிடைத்த ஒன்றல்ல

மிகவும் பாடுபட்டே இந்த ஜனாதிபதி வேட்புரிமையை பெற்றேன்.

ஐக்கிய தேசிய முன்னணியில், தனது கரங்களை பலப்படுத்திய, இந்த வேட்புரிமையை பெற பல்வேறு வேலைத்திட்டங்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டார்.

செய் நன்றியை மதித்ததவனாக அதனை தான் நினைவுப்படுத்த வேண்டும்.

நான் உங்களின் நாயகன் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

தனது உடம்பின் சகல குருதி நாலங்களிலும் பிரேமதாசவின் குருதியே பயணிக்கிறது.

எனவே பகலிரவு பாராது நாட்டு மக்களை பாதுகாக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நன்றி மறக்காமல் இருந்தால் சரிதான்
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்-07

    ReplyDelete

Powered by Blogger.