Header Ads



சஜித்திற்கு எதிரான, நிலைப்பாட்டிலிருந்து ரவி பல்டியடிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வதற்கு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிரிகொத்தாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்க பாடுபட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக அனைத்து விதமான வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துள்ளேன்.

ஐக்கிய தேசியக் கட்சி கூட்டு சேரும் போதெல்லாம் ஒரு வலுவான வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதை கடந்த காலங்கள் காட்டியுள்ளன.

கடந்த ஆண்டு இறுதி பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வலிமை வெளிக்காட்டப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை ஐக்கிய தேசியக் கட்சி பிளவுடனேயே சந்திக்கும் என பலரும் எண்ணியிருந்தனர். எனினும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றுபட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற செய்வதற்கு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.