Header Ads



பாசிசவாதத்தைத் தோற்கடிக்கவும், அடிப்படைவாத கட்சிகள் தோன்றுவதை தடுக்கவும் சஜித்திற்கு வாக்களியுங்கள்

பாசிசவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எம்மிடம் காணப்படும் ஒரே குறிக்கோளாகும். அண்மைக்காலமாக மேற்குல நாடுகள் பலவற்றிலும் அடிப்படைவாதக் கட்சிகள் உருவாகிவருவதைக் காண்கின்றோம். எமது நாட்டிலும் அத்தகைய அடிப்படைவாதக் கட்சிகளைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதனைத் தடுப்பதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாசிச ஏகாதிபத்தியவாதத்தை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கிலான இடதுசாரிகள் ஒத்துழைப்பு மாநாடு இன்று கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 

அந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.