Header Ads



அயோக்கியத்தனத்தை அடைக்களமாக பயன்படுத்துகின்ற, கும்பலுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்

இந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற பாரிய போட்டியாகும். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக மக்கள் தங்களது வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) வவுனியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

கடந்த அரசாங்கத்தில் பெருந்தொகையானோர் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கு எவ்விதமான பொறிமுறைகளும் இல்லாமல் அவர்களின் அப்பாவி உறவினர் செய்வதறியாது தவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தின் உத்தரவின் பிரகாரம் காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளோம். 

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆணைக்குழுவில் பதிவுசெய்ய முடியும். இதன்மூலம், காணாமலாக்கப்பட்டோரை கண்டறியும் விதத்தில், அவர்களது குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படும். அத்துடன் இழப்பீடுகளை வழங்கவும் அவர்களின் குடும்பத்துக்கு மறுவாழ்வாழ்வு அளிக்கவும் இதன்மூலம் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களை மீளமைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனிப்பட்ட வன்மங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல், அட்டூழியங்கள், அட்டகாசங்கள் இனியும் தொடராமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களை தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமூலமாக அமுல்படுத்தியுள்ளோம். 

நாட்டின் இளம் சந்ததியினருக்கு புதிய உற்சாகத்தையும், உற்வேகத்தையும் உருவாக்குகின்ற இளம் தலைவராக நாங்கள் சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ளோம். இதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, சகவாழ்வை விரும்பும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அவருக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இதைவிட பெரியதொரு ஆறுதலை மக்கள் அடையப் போவதில்லை.

வெளிநாட்டு சக்திகளுக்கு சோரம்போகாத இலங்கையை உருவாக்கி புதிய யுகமாற்றத்தை உருவாக்குவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக, நேர்மையான, சகல இனங்களுக்கும் நிம்மதியான வாழ்வை தரக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டிருக்கிறோம். 

இந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற போட்டியாகும். சிறுபான்மை மக்களை துச்சமாக மதித்து, யுத்தம் என்ற போர்வைக்குள் அவர்கள் ஏற்படுத்தி கெடுபிடிகள் யுத்த முடிவின் பின்னரும் தீர்ந்தபாடில்லை. தொடர்ச்சியான பாய்ச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கும்பலுக்கு நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியாது.

சிறுபான்மை தலைமைகள் ஒருமித்து உருவாக்கியுள்ள சஜித் பிரேமதாச மீது நீங்கள் வைக்கம் நம்பிக்கை, உங்களிடமிருந்து வருகின்ற உற்சாக்கத்தின் மூலம் வெளிப்படுகின்றது. இந்த தேர்தல் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக கருதி, ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்.

1 comment:

  1. The Muslims have begun to act on their own politically and have started to support Gotabaya, Insha Allah. “THE MUSLIM VOICE” will do all it is possible within it’s ability to make Gotabaya’s victory a success. “Wait and see” what the Muslims voters will do in the Eastern and Northern provinces too, Insha Allah. Rauf Hakeen has already complained that the Muslims are moving away from the SLMC and this has become a "craze" in the Muslim supported SLMC areas.
    The duped and hoodwinked Muslim voters who were made to “vote” the “Hansaya” have begun to understand the treachery of these Muslim Civil Society Leaders, Community Leaders, and Ulema Sabai Leaders by the action of the “Yahapalana Government” now. They are “disgruntled” and they have begun to show their displeasure and have begun to retaliate against these so-called deceptive, hoodwinking and opportunistic Muslim Politicians, Muslim Political parties and their leaders, Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders to safeguard their legitimate “Muslim Rights” and work towards “National Reconciliation”. They are no more willing to be duped by the press releases and media dramas staged by these stooges of the “Yahapalana Government” anymore. The Muslim Youth and the young professionals of the community have begun to use “SOCIAL MEDIA” to challenge these scroundels. In the next elections, surely the Muslims are contemplating to vote the “Joint Opposition” to power. THEY WILL VOTE GOTABAYA RAJAPAKSA TO BECOME THE NEXT PRESIDENT OF SRI LANKA BECAUSE THEY CAN TRUST HIM TO ERADICATE MUSLIM TERRORISM TOO, Insha Allah.
    Noor Nizam, Peace and Political Activist, Political Communications Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.