Header Ads



நீர்கொழும்பில் வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி


- எம்.ஜே.எம். தாஜுதீன் -

அண்மையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை (29.10.2019) உதவிப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சுமார் எட்டு லட்லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான 100  படுக்கை மெத்தைகளும் 550 நுளம்பு வலைகளும் பாதிக்கப்பட்ட சகல இன மக்களுக்கும் இவ்வாறு வழங்கப்பட்டன.

புத்தளம் மதுரங்குளியில் இயங்கும் மேர்சி லங்கா நிறுவனம் குவைத்தில் உள்ள தனவந்தர்களின் உதவியுடன் இதற்கானஏற்பாடுகளை மேற்கொண்டது.

சில உள்ளூர் அமைப்புகளும் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகளும் இந்த நிகழ்வுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினர்.




No comments

Powered by Blogger.