Header Ads



சக மீனவரின் உடலை 6 நாட்களாக பாதுகாத்து, இறுதியாக கடலில் போட்டோம் - கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர்

ஆமை இரத்தத்தைத் தினமும் குடித்து வாழ்ந்த நிலையில் உயிரிழந்த சக மீனவரின் பூதவுடலை  ஆறு நாட்களாக உடன் வைத்திருந்த நிலையில் இறுதியாகக் கடலில் தூக்கிப் போட்டோம்  எனக் கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

கடந்த 18.09.2019 ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்களான சாய்ந்தமருதை சேர்ந்த  36 வயதான சீனி முகம்மது ஜுனைதின், 37 வயதானஇஸ்மா லெப்பை ஹரீஸ் ஆகியோர்  திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குக் கடந்த வியாழக்கிழமை(10) இரவு அழைத்து வரப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர்  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாய்முறைப்பாடினை பதிவு செய்த பின்னர் தத்தமது வீட்டிற்குச் சென்றடைந்தனர்.

காரைதீவை சேர்ந்த  47 வயதான சண்முகம் ஸ்ரீ கிருஷ்ணன் என்ற மீனவர் 10 நாட்களின் பின் இறந்ததாகவும் அவரின் உடலை தாங்கள் 6 நாட்களாக தங்களுடன் வைத்துக் கொண்டிருந்ததாகவும்  அதன் பின்னர்  அவருடைய பூதவுடலை  தங்களின் மிதக்கும் உடையில்  சுற்றி கடலில் விட்டதாகவும் கண்ணீர் மல்க  சல மீனவர்கள் தெரிவித்தனர்.

குறித்த மீனவரின்  பிரிவால் துயறுற்றிருக்கும் அவரின் மனைவி  பிள்ளைகள் மற்றும் அவரது உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர்கள் குறித்த நபரின் குடும்ப நிலையினை கருத்திற் கொண்டு  வாழ்வாதரத்தைக் மேன்படுத்த மீனவ அமைப்புக்களும் மீன்பிடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மனிதாபிமான முறையில் இன,மத பேதங்களை மறந்து உதவிக்கரம் நீட்டவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் இவ்வாறு  காணாமல்போன மீனவர்களும் அந்த படகும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை அணுகிக் குறித்த படகினை கரைக்குக்  கட்டி இழுத்துச் செல்ல உதவிய  சகோதர இன மீனவர்களுக்கும்,   அதன் உரிமையாளருக்கும்  மற்றும் இரவு பகல் பாரது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கத்தினருக்கும்  அதன் முக்கிய நிர்வாகிகளுக்கும்  அனைத்து மீனவத் தொழிலாளர்களுக்கும் பொலிஸ், கடற்படை  மற்றும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கும், ஏனைய முக்கிய அதிகாரிகள், ஊடகங்கள் அனைவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினரும் குறித்த படகின் உரிமையாளர்களும் தங்களுடைய  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டனர்.

மேலும் எம்மை எந்தவொரு அமைச்சர்களோ எமது சமூகம் சார்ந்த அரசியல்வாதிகளோ வந்து ஆறுதல் கூடச் சொல்லவில்லை. கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்குத் தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையினாலே இவ்வாறான உயிரிழப்புகளும்  உடமையிழப்புகளும் நிகழ்கின்றன. உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் செல்லும் இந்த மீனவர்களின் உழைப்பை நம்பி பல குடும்பங்கள்  காத்துக்கொண்டிருக்கின்றன.

 மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர். பாறுக் ஷிஹான்

2 comments:

  1. why don't they learn about basic navigation techniques in sea from skilled persons who are expert in navigation

    ReplyDelete

Powered by Blogger.