5 லட்சம் மக்களை திரட்டி வரலாற்றில், மிகப்பெரிய கூட்டத்தை நடத்தப்போகும் UNP
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக வரலாற்றில் மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை நடத்த போவதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு 5 லட்சம் மக்களை வரவழைத்து இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை நடத்த போவதாகவும் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இது எனவும் அவர் கூறியுள்ளார்.
பெரிய கூட்டம் நடத்துவது பெரிதல்ல. உங்களுக்கு முடியுமென்றால் ஜே.வீ. பீ யின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி அதனைவிட உயர்ந்த Discipline உடன் நடாத்திக் காட்டுங்கள் பார்க்கலாம். எதிர்காலத்தில் மிகவும் வேண்டப்படுவது இதுதான்!
ReplyDelete