Header Ads



சஜித்தின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள, சுஜீவ, நளீன் ஆகிய 3 பேர் நியமனம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஊடக பேச்சாளர்கள் மூன்று பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் மங்கள சமரவீர, சுஜீவ சேனசிங்க மற்றும் பிரதியமைச்சர் நளின் பண்டார ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை சஜித் பிரேமதாசவின் சார்பில் இவர்கள் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகளை வெளியிடுவார்கள் என கொழும்பு வோக்சோல் வீதியில் உள்ள சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.