Header Ads



இன்னும் 30 நாட்களே பதவியில், இருக்கப்போகும் ஜனாதிபதி மைத்திரி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் இறுதி 30 நாட்கள் இன்றுடன் 17.10.2019
ஆரம்பமாகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது.

இதனடிப்படையில், இன்றில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவி வகிப்பார்.

மைத்திரிபால சிறிசேன கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

1 comment:

  1. Why he wanted occupy a palace at Tax payers money after out of office?

    Can't he go and stay at his own house in Plonnarwa? This culture should be changed by the new president elect Mr. Peramadsa.

    ReplyDelete

Powered by Blogger.